News December 4, 2024
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்:- 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.59 மற்றும் 14.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.45 நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 59.77அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23.9 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.7அடி நீரும் இருப்பு உள்ளது.
Similar News
News January 3, 2026
குமரி: அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விபரீத முடிவு!

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் மன வேதனையில் பால்ராஜ் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் நேற்று (ஜன.2) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 3, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News January 3, 2026
குமரி: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கருங்கல் அருகே திப்பிரமலை நெடுவிளையை சேர்ந்த தம்பதி ஜெறின் (41) – உஷா (32). இவர்களுக்கு ஒரு மகனும் (6), ஒரு மகளும் (5) உள்ளனர். சம்பவத்தன்று இரவு ஜெறின் அருகில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்று, பின்னர் ஜெறின் திரும்ப வந்த போது மனைவியையும், 2 குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து ஜெறின் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.


