News March 28, 2025

குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

Similar News

News July 11, 2025

குமரியில் திருமணத் தடை நீக்கும் ஜடாதீஸ்வரர்

image

திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயிலின் எதிரில் தளியல் தெருவில் ஜடாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பகவான் உக்கிர மூர்த்தியாகக் காட்சி தருவதால் செல்வச் செழிப்பு தரும் தாரை வழிபாடு முக்கியமானதாக உள்ளது. திருமணத் தடை நீங்க இங்கே சுயம்வர அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், நெய்விளக்கு, எள் விளக்கு ஆகியவற்றுடன் கோயிலை 3 முறை வலம் வந்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

News July 11, 2025

குமரியில் விஷ ஜந்து கடித்து கொத்தனார் உயிரிழப்பு

image

திருவட்டார் அருகே தச்சக்குடி விளையை சேர்ந்த கொத்தனார் சதீஷ்(37). திருமணமாகாத இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஜூலை.07 தேதியன்று  அருகில் உள்ள வயலில் மயங்கிய நிலையில்
கிடந்தவரை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து  திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News July 11, 2025

கன்னியாகுமரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஜூலை.26 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 113 நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!