News March 28, 2025

குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

Similar News

News December 4, 2025

குமரி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

குமரி மாவட்ட மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 4, 2025

குமரி: எரிந்த நிலையில் வாலிபர் சடலம்

image

கருங்கல் சகாயநகர் ஜெனிஷ்(28)க்கு திருமணமாகி மனைவி அவரை விட்டுப்பிரிந்து சென்று விட்டார். தனியாக வசித்து வந்த ஜெனிஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் நேற்று காலையில் அவரது அறையில் இருந்து புகை வரவே உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீயில் எரிந்த நிலையில் கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கருங்கல் போலீசார் விசாரணை.

News December 4, 2025

குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (டிச.4) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!