News March 28, 2025

குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

Similar News

News November 22, 2025

குமரி: பொக்லைன் இயந்திரம் மோதி டிரைவர் பலி

image

முளகுமூடு பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆனந்தராஜ் (24). நேற்று முன்தினம் சுருளகோடு கஞ்சிக்குழி கிரஷரில் மணல் பாரம் ஏற்ற டெம்போவை நிறுத்தினார். அப்போது மணலை அள்ளி டெம்போவில் போட்டுக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் பக்கெட் ஆனந்தராஜ் மீது மோதி டெம்போவுடன் சேர்ந்து நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தார். ஆனந்தராஜை மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்து விட்டதாக கூறினர். குலசேகரம் போலீசார் விசாரணை.

News November 22, 2025

குமரி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

image

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் குமரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க..

News November 22, 2025

குமரி: CSIF வீரர் தற்கொலை

image

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே களியல் சிறுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு படை (CSIF) வீரர் சுனில் ராஜ் (39). இவருக்கும் மனைவி சிவராணிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி வீட்டில் சென்று பார்த்த போது சுனில் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!