News March 28, 2025

குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

Similar News

News December 21, 2025

குமரி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

படர்ந்தாலு மூடு அருகே பூவ காட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் ராஜ் (25) இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் வழக்கு உள்ளது.அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சஜின் ராஜ் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News December 21, 2025

குமரி: பெண்ணின் ஆபாச வீடியோவை பரப்பிய இளைஞர்!

image

மதுரை அம்பேத்கார் தெரு அஜித்குமார்(23), பொன்மனை 20 வயது பெண்ணுடன் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமாக பழகியுள்ளார். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் அவரிடமிருந்து விலகினார். இதனால் அஜித்குமார் அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய வீடியோக்கள், ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். குமரி சைபர் கிரைம் போலீசார் அஜிக்குமாரை நேற்று செய்தனர். 

News December 20, 2025

குமரி: 1.53 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – விவரம் அறிய CLICK

image

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 7,19,973 பெண்கள் 7,19,386 என மொத்தம் 14,39,499 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என 1,53,373 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <>LINKல்<<>> கிளிக் செய்யவும்

error: Content is protected !!