News March 28, 2025

குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!

Similar News

News December 22, 2025

குமரி: மயங்கி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

image

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெல் லார்மின். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் தம்பி ஸ்டாலின் ஜோஸ் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கேரளாவில் தொழிலுக்கு சென்றுவிட்டு கடந்த 18-ம் தேதி வீட்டிற்கு சென்ற நிலையில் சமையலறையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News December 22, 2025

குமரி: மாணவி செயலால் பரபரப்பு!

image

நாகர்கோவில் வல்லன்குமரன்விளை பகுதி நீர்த்தேக்க தொட்டியின் மீது நேற்று முன் தினம் மாணவி ஒருவர் ஏறி நின்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவியை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் மாணவி இறங்காததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கீழே இறங்கிய மாணவியிடம் விசாரணை செய்ததில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொட்டியின் மேல் ஏறி நின்றதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News December 22, 2025

குமரி: டிகிரி போதும்., BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

image

குமரி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!