News December 31, 2024

குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.

Similar News

News November 24, 2025

குமரி மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவிப்பு

image

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 ஆம் தேதி உருவாகும் .
இதனால் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ் கடல் மீன் பிடிப்பவர்கள் உடனே திரும்பவும் மீன் பிடிக்கும் உபகரணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!