News December 31, 2024
குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
Similar News
News November 20, 2025
குமரி: கூட்டுப் பட்டாவை மாற்ற எளிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT.
News November 20, 2025
குமரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
குமரி மக்களே.. PF குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஆகிய இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நவ.27ம் தேதி அன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என குமரி வைப்பு நிதி ஆணையர் கூறினார்.


