News April 25, 2025
குமரியில் 13,000 புதிய காப்பீட்டாளர்கள் காப்பீடு செய்துள்ளனர்

குமரி மாவட்ட தபால் துறையில் கிராமிய தபால் ஆய்வு காப்பீடு திட்டத்தில் ரூ.178 கோடியும், தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.275 கோடியும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக 13,000 பயனாளிகள் காப்பீடு செய்து இணைந்துள்ளனர். ஆதார் பதிவு, திருத்த சேவைகள் மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பயனாளிகளும், புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18,484 பயனாளிகள் பயன் அடைந்தனர்.
Similar News
News November 20, 2025
குமரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
குமரி மக்களே.. PF குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஆகிய இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நவ.27ம் தேதி அன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என குமரி வைப்பு நிதி ஆணையர் கூறினார்.
News November 20, 2025
குமரியில் 860 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.


