News April 25, 2025

குமரியில் 13,000 புதிய காப்பீட்டாளர்கள் காப்பீடு செய்துள்ளனர்

image

குமரி மாவட்ட தபால் துறையில் கிராமிய தபால் ஆய்வு காப்பீடு திட்டத்தில் ரூ.178 கோடியும், தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.275 கோடியும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக 13,000 பயனாளிகள் காப்பீடு செய்து இணைந்துள்ளனர். ஆதார் பதிவு, திருத்த சேவைகள் மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பயனாளிகளும், புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18,484 பயனாளிகள் பயன் அடைந்தனர்.

Similar News

News October 30, 2025

குமரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

குமரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில்<> LINK<<>>-ல் தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

குமரி: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

குமரியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க

News October 30, 2025

குமரி: இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

image

நேசமணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் (58). அக்.24-ந் தேதி இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜனிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திடீரென உடல்நலக்குறைவால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் தேறியதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!