News April 6, 2025

குமரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டெலிகாலர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 – 59 வயதிற்குட்பட்டவர்கள் மே.31 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News November 28, 2025

குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

image

கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணன் (42) தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். கண்ணன் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் கண்ணன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார். தென் தாமரைகுளம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News November 28, 2025

குமரி: உங்கள் வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் டிசம்பர் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது.

News November 28, 2025

நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்

image

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!