News April 22, 2025

குமரியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 34 லட்சம் நிதி

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.

Similar News

News December 1, 2025

குமரி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

குமரி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்<>கு க்ளிக்<<>> செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் பழைய VOTER ID கிடைச்சுடும். இதை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

நாகர்கோவிலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

நாகர்கோவில், பள்ளவிளை கங்கானகரையை சேர்ந்த லிவினா வேலை தேடி வந்தார். நேற்று அவரது லிவினா வீட்டின் அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை.

News December 1, 2025

குமரியில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

image

குமரி மாவட்டத்திற்கு 9 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாடசாமி புதுக்கடை இன்ஸ்பெக்டராகவும், மதுரை கருப்பசாமி தக்கலை இன்ஸ்பெக்டராகவும், நெல்லை தமிழரசன் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டராகவும், தென்காசி மாடன் ராம்குமார் திருவட்டார் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை வேலம்மாள் வடசேரி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!