News April 22, 2025
குமரியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 34 லட்சம் நிதி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.
Similar News
News December 8, 2025
குமரி: குழந்தை கடத்தலில் பிடிபட்டவர் வாக்குமூலம்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 3 வயது <<18494613>>சிறுமியை கடத்திய<<>> வழக்கில் ஆட்டோடிரைவர் யோகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர் அவர் போலீசில் கூறியதாவது – மதுக்கடையில் மது அருந்திய எனக்குப் பித்து பிடித்தது போல் இருந்தது ரயில் நிலையம் சென்று சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தேன். பின் உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தூக்கிச் சென்றேன். ஆட்டோவில் அங்கும் இங்கும் சுற்றிய என்னை போலீஸ் கைது செய்தது என்றார்.
News December 8, 2025
குமரியில் 820 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
News December 8, 2025
குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை பண்ணுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


