News April 2, 2025
குமரியில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் வரை மானியம்

குமரி மாவட்டத்தில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் புதிய கோழிப் பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைக்கலாம். தகுதி உடையவர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 24, 2025
குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (அக். 25) நடைபெற உள்ளது. ஆகையால் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE!
News October 23, 2025
மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (அக். 23) நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.
News October 23, 2025
குமரி மக்களுக்கு உதவி எண் வெளியிட்ட எஸ்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையை எதிர் கொள்வதற்கும், வெள்ள மீட்பு பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய என் 100 அல்லது 7010363173 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SHARE IT


