News April 23, 2025
குமரியில் குற்ற செயல்கள் குறைவு: எஸ்பி தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தை ஒப்பிடு கையில் இந்த ஆண்டின் கடந்த நான்கு மாதங்களில் கொலை, கொள்ளை மற்றும் விபத்து உயிரிழப்புகள் 60% குறைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நேற்று கூறினார்.
Similar News
News December 12, 2025
குமரி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் இதை தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.
News December 12, 2025
குமரி: அழுகிய நிலையில் டிரைவர் சடலமாக மீட்பு

மணக்காவிளை வெள்ளைப் பாறையடி பகுதி டிரைவர் கிறிஸ்டோபர் (53). 8 மாதங்களுக்கு முன்பு இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார். வீட்டில் கிறிஸ்டோபர் தனியாக வசித்து வந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து (டிச.10)ம் தேதி இரவு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் தக்கலை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் உடலை கைப்பற்றினர்.
News December 12, 2025
குமரி: பெண்குரலில் பேசி மோசடி; இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பார்த்திபன் தனியார் திருமண தகவல் நிலையத்தில் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்திருந்தார். அவரை குமரி மாவட்ட பெண் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.17.50 லட்சம் முதலீடு செய்து நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி ஏமாற்றி உள்ளார். நேற்று அரியலூர் போலீசார் பெண் குரலில் பேசி பார்த்திபனை ஏமாற்றிய கல்குளம் அசார் (36) என்பவரை கைது செய்து செல்போன், சிம் பறிமுதல் செய்தனர்.


