News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
Similar News
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கன்னியாகுமரி பேரூராட்சியில் ரூ.1.15 கோடிக்கு ஏலம்

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15 முதல் ஜன.15 வரை சீசன் காலமாகும். இந்த 60 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா். சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


