News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
Similar News
News December 12, 2025
குமரி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

குமரி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க
News December 12, 2025
குமரியில் மனைவி, மாமியார் மீது தாக்குதல்

திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. கணவருடன் விவாகரத்து பெற்று பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் நித்யாவுக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் பழக்கமாகி குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பு சுரேஷின் செல்போனில் விவாகரத்தான பல பெண்களை குறிவைத்து Instagramல் பேசியுள்ளார். இதுபற்றி கேட்ட நித்யா (ம)அவரது தாயரை தாக்கிய சுரேஷ் அவரது தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு.
News December 12, 2025
நாகர்கோவில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை

ஜம்முதாவிலிருந்து இன்று (டிச.12) அதிகாலை ஒரு மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இரண்டு பைகள் அனாதையாக கிடந்தது. அதனை ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை செய்த போது அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


