News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
Similar News
News December 18, 2025
குமரியில் ரைட்டர், ஏட்டு மீது நடவடிக்கை

கட்டசல் பகுதியில் உள்ள கல்குவாரி அனுமதி இல்லாமல் ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து எஸ்பி ஸ்டாலினுக்கு புகார்கள் சென்ற நிலையில் நள்ளிரவில் குவாரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. அதில் விதிமீறல் நடந்துள்ளது தெரியவந்த நிலையில் குவாரி மேலாளரான ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மேலும் குவாரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட ரைட்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
News December 18, 2025
குமரியில் புகார் அளிக்க எண் வெளியீடு

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News December 18, 2025
குமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

குமரி மாவட்டத்தில் ரயில் மூலம் சில தினங்களாக கஞ்சா தொடர்ச்சியாக கடத்தி வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் இன்று (டிச.18) தகவல் தெரிவித்துள்ளனர்.


