News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
Similar News
News December 15, 2025
குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.
News December 15, 2025
குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.
News December 15, 2025
குமரி: காதலன் மது குடித்ததால் மாணவி தற்கொலை

தக்கலை ஆசான் கிணறு பகுதியை சேர்ந்த +2 மாணவி கடந்த டிச.13ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று தக்கலை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், டிச.13ல் காதலனைதேடி அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் மதுகுடித்துக் கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டில் வந்து தற்கொலை செய்ததாகவும் தெரியவந்தது.


