News April 6, 2025
குமரியில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2025 அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் 10 தேர்ச்சி ரூ.300, +2 தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். SHARE IT
Similar News
News November 20, 2025
குமரி: வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
குமரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு முதியவர் தற்கொலை

ஆசாரிப்பள்ளம் சந்தனராஜ் (67) 32 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து, சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோஸ் நகர் கொட்டகையில் நவ 18ம்தேதி தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது உடலை ஆசாரிபள்ளம் போலீசார் மீட்டனர். சொத்து, மன ரீதியான பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர்.
News November 20, 2025
கன்னியாகுமரியில் மதில் சுவரில் மோதிய பேருந்து

கன்னியாகுமரியில் அய்யப்ப சாமி பக்தர் வாகனம் மதில் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் 20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ், டெம்போ டிராவல்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.


