News April 1, 2025

குமரியில் இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு: எஸ்பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைவாகும் என்று கூறியுள்ளார்.

Similar News

News September 19, 2025

குமரி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

நாகர்கோவில்: மருமகளின் காதை கடித்த மாமியார்

image

நாகர்கோவில்: சாய்கோடு பகுதியைச் சேர்ந்த தமபதியினர் பிரின்ஸ் – மஞ்சு. மஞ்சு தனது கணவரின் குடிப்பழக்கைத்தை பற்றி பேசினால் மகனை தவறாக பேசாதே என்று மருமகளிடம் அல்போன்சா சண்டை போடுவாராம். நேற்று முன்தினம் மாலை பிரின்ஸ் மற்றும் மஞ்சு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுவுடன் அல்போன்சா தகராறில் ஈடுபட்டதோடு கல்லால் அவரது முகத்தில் அடித்து காதை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

News September 18, 2025

கன்னியாகுமரியில் ரூ.1085 கோடியில் திட்டம் தயார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாயை சீரமைக்க ரூ.1085 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தோவாளை கால்வாய் ரு.189 கோடி, அனந்தனார் கால்வாய் ரூ.186 கோடி, நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் ரூ.189 கோடி, பட்டணம் கால்வாய் ரூ.60 கோடி, திற்பரப்பு கால்வாய் ரூ.15 கோடியிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

error: Content is protected !!