News March 24, 2025

குமரியில் ஆவின் பால் கொள்முதல் 6000 லிட்டராக சரிவு!

image

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாடுகளுக்கு பால் சுரக்கும் தன்மை குறைந்து, 9000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6000 லிட்டராக குறைந்துள்ளது. மீதமுள்ள பாலை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

குமரி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

குமரி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். *ஷேர் செய்யுங்கள்

News December 23, 2025

நாகர்கோவிலில் அதிர்ச்சி., 2017 வழக்குகள்!

image

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று (டிச.22) வடசேரியில் மினிபஸ் ஒன்றை சோதனையிட்டனர். அதில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் டிரைவர் பஸ்சை இயக்கியதால் அவருக்கு ரூ.12000 அபராதம் விதித்ததோடு அதிக ஒலியுடன் பாடல் ஒலிபரப்பட்டதால் கூடுதலாக ரூ500 அபராதம் விதித்தனர். டிசம்பரில் இதுவரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவில் மாநகரில் மட்டுமே 2017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News December 23, 2025

குமரி: கார் மோதி கல்லூரி மாணவர் பலி – டிரைவர் கைது

image

குளச்சல் கல்லூரி மாணவர்கள் முகமது பயிஸ், அபிஸ் ஆகியோர் டிச 21ம் தேதி பைக்கில் செல்லும் போது இரவிபுதூர்கடையில் எதிரே வந்த கார் மோதியதில் முகமது பயிஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதித்தபோது, விபத்தை ஏற்படுத்திய கார் வெள்ளமடம் வக்கீலின் கார் என தெரிந்தது. நேற்று (டிச 22) போலீசார் அகஸ்தீஸ்வரம் பகுதி கார் டிரைவர் பாபுவை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!