News March 24, 2025
குமரியில் ஆவின் பால் கொள்முதல் 6000 லிட்டராக சரிவு!

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாடுகளுக்கு பால் சுரக்கும் தன்மை குறைந்து, 9000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6000 லிட்டராக குறைந்துள்ளது. மீதமுள்ள பாலை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
திருவட்டாறில் E.P.F குறைதீர் கூட்டம்

நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி நிறுவனம் & தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் “வைப்புநிதி உங்கள் அருகில் – குறைதீர்ப்பு முகாம்” வரும் டிச.29ம் தேதி திருவட்டாறு எக்செல் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயனடையலாம் என நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுப்பிரமணி தகவல் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
குமரியில் G.H ஊழியருக்கு கொலை மிரட்டல்!

தக்கலை GH-ல் டிச.17ம் தேதி பள்ளியாடி பகுதி அஜய் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். அவர் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சிகிச்சை பற்றி தவறாக பேசியுள்ளார். உடனே அங்கு நின்ற மூவாற்றுமுகம் பகுதி எலும்பு முறிவு பிரிவு டெக்னீஷியன் ஸ்துதித் பிரவின் லேவி அஜய்யை வெளியே செல்ல கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் அவரை தள்ளி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். தக்கலை போலீசார் அஜயை நேற்று (டிச.18) கைது செய்தனர்.
News December 19, 2025
குமரியில் அதிமுக கவுன்சிலர் கைது!

கடையாலுமூடு அருகே களியலில் அனுமதியின்றி இயங்கிய குவாரியில் நேற்று முன் தினம் மாவட்ட SP ஸ்டாலின் சோதனை மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த கடையாலுமூடு அதிமுக கவுன்சிலர் ஸ்டாலின் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நில உரிமையாளர், குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், குவாரி செயல்பட உடந்தையாக இருந்த கடையாலுமூடு போலீசார் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.


