News August 10, 2024
குமரியில் ஆக.,15ல் கிராம சபை – ஆட்சியர் அறிவிப்பு

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஆக.10) தெரிவித்துள்ளார். ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 8, 2026
குமரி: கால்வாயில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

குளச்சல் AVM கால்வாயில் நேற்று மாலை துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனை செய்ததில் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிய வந்துள்ளதாக கூறினர்.
News January 8, 2026
பொங்கல் பரிசுத்தொகுப்பு; தாலுகா அளவில் பறக்கும் படை அமைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் இருப்பின் அதனை மாவட்டம் நிர்வாகத்திற்கு தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தாலுகா அளவில் மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களுக்கும் பறக்கும் படை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 8, 2026
முக்கடல் சங்கமத்தில் பொங்கல் விழாவிற்கு அழைப்பு

சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி வரும் ஜன.14 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி முக்கடல் மைதானத்தில் ஜன.,15, 16 ஆகிய இரு நாட்கள் மாலை 5.30 முதல் 8.30 மணி வரை பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெகடர் அழைப்பு விடுத்துள்ளார்.


