News February 17, 2025
குமரியில் அதிசய விநாயகர்

குமரி மாவட்டம் கேரளபுரத்தில் கேரளா மற்றும் தமிழ் கலை வடிவில் உருவாக்கப்பட்ட அதிசய விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் ஆறு மாத காலம் வெள்ளை நிறத்திலும் ஆறு மாத காலம் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அதிசய விநாயகர் ஆவார். கேரள வர்மா மகாராஜாவால் இந்த கோயில் நிறுவப்பட்டது என கூறப்படுகிறது. பழமையான இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். SHARE IT.
Similar News
News November 20, 2025
குமரியில் 860 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.
News November 20, 2025
குமரி: வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
குமரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு முதியவர் தற்கொலை

ஆசாரிப்பள்ளம் சந்தனராஜ் (67) 32 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து, சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோஸ் நகர் கொட்டகையில் நவ 18ம்தேதி தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது உடலை ஆசாரிபள்ளம் போலீசார் மீட்டனர். சொத்து, மன ரீதியான பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர்.


