News April 14, 2025
குமரியின் அருமையான சுற்றுலா தலம்

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 13, 2025
குமரி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04652-227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 13, 2025
குமரில் குட்கா கடத்திய 2 பேர் கைது!

குமரி-கேரள எல்லை சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எல்லை பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கேரளாவில் இருந்து குமரிக்கு 225 கிலோ குட்கா கடத்தி வந்ததாக சசிகுமார், விஜய் பிரதீப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
News December 13, 2025
குமரி: மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

தக்கலை மருதவிளை கவுதம ராபின்சன் (31) மரம் ஏறும் தொழிலாளி. நேற்று கவுதம ராபின்சன் மருந்துக்கோட்டையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுதம ராபின்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தக்கலை போலீசார் விசாரணை.


