News March 27, 2024

குன்றத்தூர் அருகே நிவாரண பொருட்கள் வழங்கல்

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

Similar News

News April 19, 2025

காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

image

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல. குலத்தொழிலை ஊக்குவிக்கிறது. விஷ்வகர்மா திட்டம் படிப்பை விட்டு வெளியேற்றி குடும்ப தொழிலை செய்ய ஊக்குவிக்கிறது. படிப்பை விட்டு குலத்தொழிலுக்கு செல்லுமாறு மாணவர்களை வஞ்சிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக” கூறினார்.

News April 19, 2025

5 அறிக்கைகளை வெளியிட்டார் முதல்வர் 

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன பொறியியல் உதிரிப்பாக நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பழந்தண்டலில் சாலை கட்டமைப்பு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அறிக்கைகளை வெளியிட்டார்.

error: Content is protected !!