News August 26, 2024
குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையை அடுத்து நீலகிரியில் குவிந்த சுற்றுலா கூட்டம், சுற்றுலா தலங்களில் அலைமோதி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக குன்னூர் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Similar News
News December 14, 2025
சமூகநீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தமிழக அரசின் பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் கூறியுள்ளார். விண்ணப்பங்களை சிறுபான்மையினர் அலுவலகத்தில் பெற்று இம்மாத 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
News December 14, 2025
கூடலூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

கூடலூரில் இருந்து ஓவேலி சாலையில் சப் இன்ஸ்பெக்டர் கவியரசரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவில் வந்த பயணிகளின் உடைமையை சோதனை செய்தனர். சோதனையில் பெரிய சூண்டியை சேர்ந்த துர்கா சுந்தரம்(60) என்பவர் மைசூரில் இருந்து 300 கிராம் கஞ்ச கடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 14, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள்,நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட உள்ளது. www.tnpcb.gov.in என்ற இணையதள முகவரியில் ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தகவல்.


