News August 24, 2024
குன்னத்தில் விழா மேடை திறந்து வைத்த அமைச்சர்

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, ஒகளூர் ஊராட்சி, காந்தி நகரில், ரூ.3-லட்சம், மதிப்பிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பாக கட்டப்பட்டுள்ள விழா மேடையினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (24.08.2024) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

நெற்குணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ( 27). இவருக்கு கோவையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை மனோஜ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 27, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாலை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன் (குன்னம்), செல்லப்பாங்கி (கூத்தூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
News November 27, 2025
பெரம்பலூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


