News January 22, 2025

குத்துச் சண்டையில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து

image

மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டியில், செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி பிரியதர்ஷினி, 40 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இம்மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News November 21, 2025

தி.மலை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

image

தி.மலை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு CLICK செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

தி.மலை: சிறுமியிடம் அத்துமீறல்-கம்பி எண்ணும் காமுகன்!

image

போளூர், பேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார் (40) இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். நேற்று (நவ.20) தி.மலை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News November 21, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!