News August 25, 2024

குத்தாலம் வெடி விபத்து: உரிமையாளர் மீது வழக்கு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் நேற்று தனியார் வெடி உற்பத்தி கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து நடைபெற்றது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குத்தாலம் போலீசார் வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழை அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவுகள் வெளியாகியுள்ளது. இதில் நேற்று காலை எட்டு முப்பது மணி முதல் இன்று காலை ஆறு முப்பது மணி வரை மயிலாடுதுறை 55.80 மி.மீ, மணல்மேடு 20.00 மி.மீ, சீர்காழி 64.80 மி.மீ, கொள்ளிடம் 65.20 மி.மீ, தரங்கம்பாடி 57.60 மி.மீ , செம்பனார்கோவில் 93 .40 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

மயிலாடுதுறை: கஞ்சா கடத்திய 3 இளைஞர்கள் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே ஆத்துப்பக்கம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த சக்தி , விக்னேஷ் மற்றும் ஹரிகரன் ஆகியோரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3.300 கிலோ கஞ்சாவை பொறையார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 17, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!