News August 25, 2024
குத்தாலம் வெடி விபத்து: உரிமையாளர் மீது வழக்கு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் நேற்று தனியார் வெடி உற்பத்தி கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து நடைபெற்றது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குத்தாலம் போலீசார் வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
மயிலாடுதுறை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 26, 2025
மயிலாடுதுறை மக்களே இதை செய்யாதீங்க

பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு மழைக்கால முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மழைக்காலங்களில் குளம், ஆறு, ஏரி பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு சென்று செல்ஃபி எடுக்கக் கூடாது. மழை நேரத்தில் சாலையில் கவனமாக வாகனங்களை ஓட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
News October 26, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு ஆணைப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினர் தலைமையில் வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை எடுத்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


