News March 18, 2024

குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

image

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று (மார்ச்.18) இந்திய நாட்டின் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்த்து மோடி ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Similar News

News November 20, 2025

பள்ளிகளில் மனநல ஆலோசகர் அவசியம்: வானதி சீனிவாசன்

image

வால்பாறை அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பதிவில், குழந்தைகள் மனரீதியாகப் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

கோவை: ரயில்வேயில் 8,850 பணியிடம்! ரூ.35,000 சம்பளம்

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!

1)மொத்த பணியிடங்கள்: 8,850

2)கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.

3)சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.

4)விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.

5)ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 20, 2025

கோவை: 6-ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது!

image

கோவை, சூலூர் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ. கிருஷ்ணாபுரத்தில் சூலூர் மருத்துவமனை மருத்துவர் கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 6ஆம் வகுப்பு படித்த முத்துலட்சுமி என்பவர் கிளினிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!