News September 14, 2024

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News November 19, 2025

அரக்கோணத்தில் இருந்து கேரளா விரைந்த வீரர்கள்!

image

கேரள மாநிலம் சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜை பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் இன்று (நவ.19) தேதி விரைந்தனர். இவர்கள் பம்பை நதி மற்றும் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சென்றனர். ஆய்வாளர் பிரதோஷ் தலைமையில் வீரர்கள் சென்றனர்.

News November 19, 2025

ராணிப்பேட்டை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.

புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<> இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 19, 2025

மாவட்ட ஆட்சியர் படிவங்களை பெற்றுக் கொண்டார்

image

ஆர்க்காடு நகராட்சி கங்கையம்மன் கோயில் தெருவில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவ.18) தேதி பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு தீவிர சிறப்பு சுருக்க திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு அதை திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரே என்று வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெற்றுக் கொண்டார்.

error: Content is protected !!