News September 14, 2024
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News January 5, 2026
ராணிப்பேட்டையில் படுஜோர் விற்பனை; தட்டி தூக்கிய போலீஸ்

ராணிப்பேட்டையில் நேற்று (ஜன.4) எஸ்.பி அய்மான் ஜமால் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மூர் அருகே கைவிடப்பட்ட கட்டிடத்தில் மர்ம நபர்கள் சுற்றி திரிவது தெரியவந்தது. சோதனையில் போதை மாத்திரை விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மாத்திரைகளை மும்பை மருந்தகத்திலிருந்து ஆர்டர் செய்ததும், 153 மாத்திரைகள் விற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
News January 5, 2026
ராணிப்பேட்டையில் ரெய்டு!

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் அறையில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். கணக்கில் வராத ரூ.25,850 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரி, 15 சா்ட், பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பலரிடம் பரிசு பொருள்களை பெறுவதாக வந்த தகவலின் பேரில் இந்த ரெய்டு நடந்துள்ளது.
News January 4, 2026
ராணிப்பேட்டை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

ராணிப்பேட்டையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் IT.


