News February 15, 2025
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.
Similar News
News November 20, 2025
சிவகங்கை: SIR ரில் சந்தேகமா.? வாட்சப் எண் வெளியீடு.!

தமிழக முழுவதும் எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பொது மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதால், மாநில தேர்தல் ஆணையம் உதவி எண்கள் அறிவித்துள்ளது. 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது 9444123456 என்ற எண்ணில் whatsapp மூலம் உங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
சிவகங்கை: SIR ரில் சந்தேகமா.? வாட்சப் எண் வெளியீடு.!

தமிழக முழுவதும் எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பொது மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதால், மாநில தேர்தல் ஆணையம் உதவி எண்கள் அறிவித்துள்ளது. 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது 9444123456 என்ற எண்ணில் whatsapp மூலம் உங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
சிவகங்கை: வாட்ஸ் அப் மூலம் ரூ.2 லட்சம் மோசடி!

சிவகங்கை அருகே நாமனூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக லாட்டரி மூலம் பரிசு விழுந்ததாக செய்தி வந்துள்ளது. இதை நம்பி அவர் ரூ.23,000 செலுத்தியுள்ளார். அதேபோல, இளையான்குடி அருகே 32 வயதான நபருக்கு வாட்ஸ்அப் மூலம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக செய்தி வந்துள்ளது. இதற்காக அவர் தவணை முறையில் ரூ.1,74,950 செலுத்தியுள்ளார். இந்த இரு வழக்குகளையும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


