News February 15, 2025
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.
Similar News
News December 14, 2025
சிவகங்கையில் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

சிவகங்கை மக்களே, ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
சிவகங்கை: கோவிலில் உண்டியல் திருட்டு.!

இளையான்குடி அருகே குறிச்சி கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வந்த சுப்பிரமணியன் என்பவர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இளையான்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 14, 2025
சிவகங்கை: லைன் மேனை தேடி அலைய வேண்டாம்.!

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


