News February 15, 2025

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது 

image

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.

Similar News

News December 16, 2025

சிவகங்கை: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை. எழுத்து தேர்வு மூலம் வேலை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 16, 2025

சிவகங்கை: மாடுகள் திருட்டு.. 3 பேர் அதிரடி கைது

image

தேவகோட்டை மாதவநகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது 2 மாடுகள் கடந்த வாரம் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக வள்ளியப்ப செட்டியார் ஊருணியை சேர்ந்த ராமலிங்கம், சாத்தமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பிரசன்னா ஆகிய 3 பேரையும் தேவகோட்டை நகர் போலீசார் கைது செய்தனர்.

News December 16, 2025

சிவகங்கையில் 12,000 காலியிடங்கள்! கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் டிச.20 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 90 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 12 ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். தொடர்புக்கு -8056501556. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!