News February 15, 2025
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.
Similar News
News December 18, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News December 18, 2025
சிவகங்கை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இளையான்குடி வட்டத்தில், வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2 நாட்களாக சமுதாயத் தலைவர்கள் புகைப்பட பலகைகள், சிமெண்ட் பீடங்களை அகற்றினர். நேற்று குமாரக்குறிச்சியில் பீடத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பரமக்குடி – இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
News December 18, 2025
காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.


