News October 24, 2024
குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு

ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை அரசன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது கடந்த 24-09-2024 அன்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: தங்கை குழந்தையை பார்க்க வந்தவர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: வடகுறும்பூரைச் சேர்ந்த கண்மணி ராஜா சென்னையில் உள்ள தனியார் பைக் ஷோரூம் இல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது தங்கைக்குப் பிறந்த குழந்தையை பார்க்க நேற்று (டிச.2) சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர், தனக்கு திருமணமாக காலதாமதம் ஆகிறது என மனவேதனையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News December 2, 2025
தியாகதுருகம் : தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் இன்று டிச( 2 ) தீயணைப்பு நிலையம் அருகில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் இதில் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <


