News April 19, 2025
குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்
Similar News
News July 6, 2025
திருப்பூர் மாவட்ட குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மாற்றம்

தமிழகம் முழுவதும் நீதிபதிகள், துணை நீதிபதிகள் நிலையில் உள்ளவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக இருந்த மோகனவள்ளி, திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை சிவில் கோர்ட்டு 26-வது உதவி நீதிபதியான விக்னேஷ் மது, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News July 5, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, தாராபுரம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News July 5, 2025
திருப்பூரில் வேலை வாய்ப்பு!

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Filed Marketing Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் <