News April 19, 2025
குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்
Similar News
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியில் மங்களம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கட்டிராஜா மற்றும் திருமூர்த்தி ஆகியோரிடம் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


