News August 24, 2024

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

image

நெமிலி அடுத்த மூலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் தினேஷ் (11) நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பும், மகள் சுப்ரியா (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், 2 பேரும் அங்குள்ள மீன் குட்டையில் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 14, 2025

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

இராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இன்று (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரிமாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

News November 14, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் குழந்தைகள் தின வாழ்த்து

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளி முன்பு அதிகாரிகள் குழந்தைகளுடன் கலந்துரையாடி, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் முதன்மை என காவல்துறை தெரிவித்தது.

News November 14, 2025

அரக்கோணத்தில் சூப்பர் அரசு வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணக்காளர், இரவு காவலர், பியூன் என பல்வேறு கற்றல், கற்றல் இல்லாத பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக். இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!