News May 17, 2024
குட்கா விற்ற கடைகளுக்கு அதிரடி சீல்

ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிப்காட் பகுதியில் 6 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News December 12, 2025
ராணிப்பேட்டையில் 18முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 18 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, ₹21 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 12 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 6 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் அணைத்து மக்களும் உதவும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News December 12, 2025
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


