News September 13, 2024
குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாலாஜா, ரத்தினகிரி, கொண்டபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் இன்று ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.
Similar News
News December 5, 2025
ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ராணிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து இன்று (டிச.5) ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை மற்றும் ரெயின்கோட் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
News December 5, 2025
ராணிப்பேட்டை: கிணற்றில் வழுக்கி விழுந்து முதியவர் பலி!

ராணிப்பேட்டை: திமிரி பேரூராட்சி அபிராமி நகரில் உள்ள கிணற்றில், முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று (டிச.4) தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (60) இயற்கை உபாதைக்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!


