News April 15, 2024
குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் நூதன பிரச்சாரம்

ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா என வாக்கு சேகரித்தார்.
Similar News
News December 12, 2025
பவானி அருகே அழுகிய நிலையில் மிதந்த சடலம்!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில், காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உடலை மீட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
17 பேரை கடித்து குதறிய தெருநாய், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.
News December 12, 2025
ஈரோட்டில் விஜய்யின் கூட்டத்திற்கு புது சிக்கல்!

ஈரோடு விஜயமங்கலம் டோல்கேட் அருகே வரும் 18-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்பதால், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று கோயில் செயல் அலுவலர் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


