News January 22, 2025
குடியரசு தலைவருக்கு அமைச்சர் அழைப்பு

மணப்பாறையில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான சாரண, சாரணீய ஜாம்போரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அழைப்பு விடுத்தார்.
Similar News
News January 8, 2026
திருச்சி: வழக்கு பணியாளர் காலியிடம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் துறையூரில் இயங்கி வரும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு வழக்கு பணியாளர் (case worker) காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள், சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
திருச்சி: போஸ்ட் ஆபீஸில் வேலை!

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <
News January 8, 2026
பொங்கல் பரிசு: திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் என மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


