News April 10, 2025

குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து

image

திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, நேற்று (ஏப்ரல் 9) குடிபோதையில் காமராஜர் சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுனில் என்பவரிடம் ரூ.20 கடனாக கேட்டுள்ளார். சுனிலிடம் பணம் பெற்ற பொன்னுமணி, ‘கஞ்சா எங்கு கிடைக்கும்’ எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், கத்தியால் பொன்னுமணியை கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். போலீசார், சுனிலை கைது செய்தனர்.

Similar News

News March 12, 2026

திருவள்ளூரில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 12, 2026

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏடிஎம் அறையில் வைக்கப்பட்ட கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

News March 12, 2026

மணவாளநகரில் டைட்டல் பார்க்! – எம்.எல்.ஏ

image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு தரப்பட்டால், மப்பேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் நிறைவுப் பணி, மாம்பழ விவசாயிகளுக்கு குளிரூட்டும் தளம்(Mango freezer zone), மணவாளநகரில் டைட்டல் பார்க் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படுமென எம்.எல்.ஏ வி.ஜே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதில், எந்தத் திட்டம் உடனடி தேவை? தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அளிக்கலாம்? என உங்களது கருத்துகளை கீழே கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!