News April 10, 2025
குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து

திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, நேற்று (ஏப்ரல் 9) குடிபோதையில் காமராஜர் சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுனில் என்பவரிடம் ரூ.20 கடனாக கேட்டுள்ளார். சுனிலிடம் பணம் பெற்ற பொன்னுமணி, ‘கஞ்சா எங்கு கிடைக்கும்’ எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், கத்தியால் பொன்னுமணியை கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். போலீசார், சுனிலை கைது செய்தனர்.
Similar News
News December 31, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.01) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 சதவீதம் அதிக மழை

வடகிழக்கு பருவமழை அக்.01ஆம் தேதி முதல் முதல் இன்று டிசம்பர் 31 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 623.9 மி.மீ., இருக்கும் நிலையில் 712.8 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.
News December 31, 2025
திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (31.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


