News August 25, 2024
குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தம்பதி

தேனி ஜங்கால்பட்டியை சேர்ந்த அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்கள் தனது மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை மீண்டும் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் பெற்றோரை கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் (நவ.28) காலை 10:30 மணிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயனடையலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
தேனி: VOTERID-க்கு வந்த NEW UPDATE!

தேனி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்கு க்ளிக் செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News November 24, 2025
தேனி: குழந்தை இறப்பு., போலீஸ் விசாரனை

கம்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அழகேசன் – பிரியா. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு தாய்பால் கொடுத்து துாங்க சென்றனர். நேற்று (நவ.23) காலை பார்த்த போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கம்பம் தெற்கு போலீசார் விசாரணை.


