News October 24, 2024
குடிநீரில் 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா

சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சென்னை மக்கள் குடிக்கும் நீரை ஆய்வு செய்தனர். இதற்காக சென்னைப் பகுதிகளிலிருந்து 752 வீடுகளில் உபயோகிக்கப்படும் நீரினை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா கலந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இது, டயரியாவை ஏற்படுத்துக் கூடியது என்பதால் கொதிக்க வைத்து குடிப்பது சிறந்ததாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 24, 2025
நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான நத்தம் விஸ்வநாதன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News November 24, 2025
BREAKING: சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நவ.29ஆம் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
சென்னையில் இது கட்டாயம்: மீறினால் ₹500 அபராதம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் செல்லப்பிராணி நாய்களை அழைத்து வரும்போது சங்கிலி மற்றும் வாய் கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களிடம் இன்று முதல் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாய் கடியைத் தடுக்கவும் 115 சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


