News February 17, 2025

கீழ்பென்னாத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

image

நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

FLASH: தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

தி.மலை: தீபத்துக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை கார்த்திகை மகா தீபம் டிச.3ல் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், அரசு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். இந்த <>லிங்க் <<>>மூலம் டவுன்லோடு செய்து, தீபத்தன்று கிரிவலம் செல்ல நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!