News February 17, 2025

கீழ்பென்னாத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

image

நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 30, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 30, 2025

கார்த்திகை மகாதீபம்: 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு

image

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு டிசம்பர் 2 முதல் 5 வரை பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க மாவட்ட காவல்துறை 24 தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரின் பல்வேறு வழித்தடங்களில் இந்த நிலையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் மாற்று நிலையங்களை பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News November 30, 2025

தி.மலை: 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

image

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் வருகிற டிச.3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். ஆதலால், வருகிற டிச.2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!