News March 4, 2025

கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்

image

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 5, 2025

செங்கல்பட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

செங்கல்பட்டில் 5.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். அதற்கடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.31 லட்சம் பேர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

News December 5, 2025

செங்கல்பட்டு: இதற்கு எப்போது தீர்வு?

image

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், கர்நாடக பக்தர்கள் படையெடுப்பு என, விழாக்காலம் துவங்க உள்ளது. இக்காலத்தில் வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்காமல் தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே இங்கு வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!