News April 11, 2025

கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஆங்காங்கே விவசாயிகளின் நில உடமை சரி பார்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இதுவரையில் இணைக்காமல் உள்ளனர். இதனால் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஏப்ரல் 15க்குள் இணைக்க வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News September 19, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

OLX App மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பயனர்களை குறிவைத்து, மோசடிக்காரர்கள் வாங்க விருப்பம் காட்டுவதாக சொல்லி Google Pay, PhonePe போன்ற அப்களில் பணம் பெறுவதற்கான போலி லிங்குகளை அனுப்புகின்றனர். அதில் பின் எண் பதிவு செய்யும்படி கூறுவர். அப்படி செய்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் இழக்கும் அபாயம் உண்டு. எனவே ஏமாற வேண்டாம். சந்தேகத்திற்கு 1930 அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.

News September 18, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தீபாவளி 2025 வரும் நிலையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி 30.09.2025க்கு முன்னர் இ-சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார்.

News September 18, 2025

கிருஷ்ணகிரியில் 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், அலேகுந்தாணி கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திபட்டான் நடுகல் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகலில் வீரர் புலியை வெற்றி கொண்ட காட்சியுடன் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு கிராமத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!