News September 13, 2024
கிருஷ்ணகிரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News November 4, 2025
கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

இன்று நவ- 4 முதல் டிச-4 வரை – வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி, டிச-9- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், டிச-9 முதல் ஜன-8 வரை – ஏற்கனவே சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல், டிச-9 முதல் ஜன- 31 வரை- அறிவிப்பு காலம் விசாரணை & சரிபார்த்தல், பிப்-07- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடல். என, த்ஹறுத்த பட்டியல் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
News November 4, 2025
கிருஷ்ணகிரி: 3ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கஜ லட்சுமி சிற்பம், யானை, குத்துவிளக்கு போன்ற வணிகச் சின்னங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், இது 825 ஆண்டுகள் பழமையான வணிகக்குழு கல்வெட்டாகும் என உறுதி செய்யப்பட்டது.
News November 4, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (03.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


