News September 13, 2024
கிருஷ்ணகிரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News November 15, 2025
கிருஷ்ணகிரி: யானை தாக்கியதில் இருவர் படுகாயம்

கிருஷ்ணகிரி: பர்கூர், ஜகினி கொள்ளை கிராமத்தில் நேற்று (நவ.14) இரவு 5 யானைகள் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் ஜகினி கொள்ளை பகுதியை சார்ந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரை யானை தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 15, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள், APPLY NOW!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <
News November 15, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


