News April 16, 2025
கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்

சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25-க்குள் www.tntenders.gov.in இல் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
கிருஷ்ணகிரி: பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்காக, ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்தப் பத்திரம் மற்றும் ரூ.600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கடைகள், கல் அல்லது தார்சுக் கட்டடங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
News September 14, 2025
கிருஷ்ணகிரி: ஷேர் மார்க்கெட் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரண்டு மடங்கு லாபம் என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. நமது நம்பிக்கையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் மோசடி முயற்சிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மோசடிகளில் ஏமாந்திருந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது