News October 25, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,துணி, நகைக்கடைகள்,தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் அளிக்கும் வகையில் 4பேர் கொண்ட புகார் குழு 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் அமைக்க வேண்டும். தவறினால் ரூ50,000 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.
Similar News
News November 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி, இரவு ரோந்து செலும் காவலர்கள் 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரி, கட்டையான பல நூலக மைதானத்தில் நாளை (நவ.23) இயற்கை விவசாயிகள் நடத்தும் 194வது மரபுச் சந்தை நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், பசு நெய், தேன், அவல், ஊறுகாய், சிறு தானியங்களால் செய்த கேக், மருந்தில்லாமல் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


