News March 22, 2025
கிருஷ்ணகிரி போலீஸ் தேடும் “புதன்கிழமை கொலையாளிகள்”

ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் கத்தியால் குத்தி கொன்ற பின்னர் வீடுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். மூன்றும் புதன்கிழமைகளில் நிகழ்ந்ததால், போலீசார் இவர்களை ‘புதன்கிழமை கொலையாளிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
Similar News
News April 8, 2025
கிருஷ்ணகிரியின் மினி ஊட்டி

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளது பெட்டமுகிளாலம் கிராமம். கடல்மட்டத்தில் இருந்து 2800மீ உயரத்தில் பசுமையான இயற்கை சூழல் நிறைந்த இந்த பகுதி கிருஷ்ணகிரியின் ஊட்டியாக உள்ளது. இங்கிருந்து சிறிது தொலைவில் பஞ்சப்பள்ளி அணை, சாமி ஏரி ஐய்யூர்வன சுற்றுச்சூழல் மையம் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் கேசரக்குலிஅணை சென்றசாமி கோவில் போன்றவை உள்ளது.இந்த லீவுக்கு போலாமானு உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி கேளுங்க
News April 8, 2025
காசநோய் இல்லா ஊராட்சிக்கு பாராட்டு சான்றிதழ்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காச நோய் இல்லாத ஊராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சி காச நோய் இல்லாத ஊராட்சி நிலை அடைந்ததற்காக பாராட்டி, பாராட்டு சான்றிதழை ஊராட்சி செயலர் கிருபாகரனுக்கு வழங்கினார்.
News April 8, 2025
ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள்<