News May 16, 2024

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.

Similar News

News November 27, 2025

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

image

1. தளி ஏரி
2.கிருஷ்ணகிரி கோட்டை
3.அய்யூர் இயற்கை பூங்கா
4.கெலவரப்பள்ளி அணை
5.அவதானப்பட்டி ஏரி பூங்கா
6.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியம்
7.கே.ஆர்.பி அணை
8.கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா
9.காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
10.ராயக்கோட்டா கோட்டை
11.ராஜாஜி நினைவிடம்
12.தளி வேணுகோபால சுவாமி கோவில்

நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க

News November 27, 2025

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News November 27, 2025

கிருஷ்ணகிரி: ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தோட்டகிரி சாலையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி சுந்தரமூர்த்தி (45). வியாபாரத்தில் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக மனமுடைந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!