News May 16, 2024

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.

Similar News

News January 1, 2026

கிருஷ்ணகிரி: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்கணுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு <>க்ளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

கிருஷ்ணகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 1, 2026

கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு கலெக்டர் கட்டுப்பாடு!

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் எருதுவிடும் விழா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவா்கள் எருதுகளைப் பிடித்து வருதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதன்மூலம் பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே மாணவா்கள், காளைகளைப் பிடித்து வருவதை முற்றிலுமாக தடுக்க விழாக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!