News May 16, 2024

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.

Similar News

News November 6, 2025

கிருஷ்ணகிரி: நாட்டையே உலுக்கிய வழக்கில் குற்றவாளி கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராவை வைத்து விடியோ எடுத்த ஒடிசா மாநில பெண்ணை உத்தனப்பள்ளி போலீஸார் நேற்று (நவ.05) கைது செய்தனர். இந்நிலையில் நீலுகுமாரியின் ஆண் நண்பர் சந்தோஷ்(எ)சதீஷ்குமார், பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரை கைதுசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் தற்போது பெங்களூரு சென்றுள்ளனர்.

News November 6, 2025

கிருஷ்ணகிரி: நவம்பர் 8ல் முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் நவம்பர் 8, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுவாக அளித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் தெரிவித்தார்.

News November 6, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (05.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!