News May 16, 2024

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.

Similar News

News April 20, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! அஞ்செட்டி-9789271329, தேன்கனிக்கோட்டை-9445000542, ஓசூர்-9445000541, சூளகிரி-9080745484, போச்சம்பள்ளி-9445000540, ஊத்தங்கரை-9445000539, பர்கூர்-7825873359, கிருஷ்ணகிரி-9445000538. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணிக்கோங்க. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 20, 2025

கிருஷ்ணகிரி: கடன் தொல்லை நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

கிருஷ்ணகிரி, ஒசூரில் அருள்மிகு சந்திர சூடேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் வேலைவாய்ப்பு மற்றும் கடன் தொல்லை நீங்கும் என்பது இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் பெறவும் இக்கோவிலுக்கு வரலாம். *கடனற்று வாழ இங்கு செல்லவும். நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 20, 2025

கிருஷ்ணகிரி நண்பனை அடித்து நகையை பறித்த நண்பர்கள்

image

கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூரை சேர்ந்தவர் சின்னப்பையன்(32). கடந்த மார்ச் மாதம் இவருடைய நண்பர்களான மாரியப்பன், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்த மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்த சின்னப்பையனை தாக்கி 2 1/2 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி போலீசாரி இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். *நண்பர்களே ஆனாலும் கவனமாக இருங்கள்*

error: Content is protected !!