News October 23, 2024
கிருஷ்ணகிரி சீர்மரபினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

OLX App மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பயனர்களை குறிவைத்து, மோசடிக்காரர்கள் வாங்க விருப்பம் காட்டுவதாக சொல்லி Google Pay, PhonePe போன்ற அப்களில் பணம் பெறுவதற்கான போலி லிங்குகளை அனுப்புகின்றனர். அதில் பின் எண் பதிவு செய்யும்படி கூறுவர். அப்படி செய்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் இழக்கும் அபாயம் உண்டு. எனவே ஏமாற வேண்டாம். சந்தேகத்திற்கு 1930 அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.
News September 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தீபாவளி 2025 வரும் நிலையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி 30.09.2025க்கு முன்னர் இ-சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
News September 18, 2025
கிருஷ்ணகிரியில் 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அலேகுந்தாணி கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திபட்டான் நடுகல் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகலில் வீரர் புலியை வெற்றி கொண்ட காட்சியுடன் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு கிராமத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க*