News April 13, 2024
கிருஷ்ணகிரி ஆட்சியர் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டியில் 100% வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு அங்குள்ள வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை சுவர்களில் ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Similar News
News December 24, 2025
கிருஷ்ணகிரி: தீ விபத்தில் உடல் கருகி கொடூர பலி!

தேன்கனிக்கோட்டை சந்தமேடு பகுதியில் பெரியசாமி என்பவர் தனது வீட்டில் நண்பருடன் நேற்று (டிச.23 )இரவு 10 மணி அளவில் மது அருந்து விட்டு போதையில் இருந்து உள்ளனர். திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பற்றி வீடு முழுவதும் எரிந்த நிலையில், பெரியசாமி என்பவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மற்றொருவர் அங்கேயே உடல் கருகி உயிரிழந்தார்.
News December 24, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேடப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (50) என்ற கூலித் தொழிலாளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் – பேரிகை சாலையில் கொளதாசபுரம் அருகே நேற்று (டிச.23) டூவீலரில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 24, 2025
கிருஷ்ணகிரியில் பயங்கர தீ!

சிப்காட், இஎஸ்ஐ ரிங் ரோடு மஞ்சுநாத் லேயவுட் அருகே உள்ள தனியார் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. குடோனில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று(டிச.23) காலை ஒன்பது மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டு குடோன் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


