News April 13, 2024
கிருஷ்ணகிரி ஆட்சியர் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டியில் 100% வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு அங்குள்ள வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை சுவர்களில் ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரி: லாரியின் கிரெய்ன் விழுந்ததால் ஒருவர் பலி!

கிருஷ்ணகிரி-குப்பம் ரோட்டில் டாரஸ் லாரி கிரெய்ன் ஒன்றை, நேற்று (நவ.30) ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் கந்திகுப்பம் அருகில் உள்ள காளி கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது வளைவில் மிகவேகமாக வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது, கிரைன் பெல்ட் அறுந்து கிரைன் கீழே சரிந்து விழுந்தது. இதில் அருகில் சென்ற ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: சொத்து தகராற்றில் மூதாட்டி கொலை- 3பேர் கைது

பர்கூர் அருகே மேல்சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (56) இவர் கடந்த 25 ஆம் தேதி பண்ணைக்குட்டை அருகே மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் சொத்துத் தகராறில் காரணமாக கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கியும், கழுதை நெரித்தும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கொலை செய்த சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் 3 பேரை போலீஸார் நேற்று (நவ.30) கைது செய்தனர்.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


