News August 25, 2024

கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளியில் மின் இணைப்பு துண்டிப்பு

image

தேன்கனிக்கோட்டை சந்தைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார இணைப்பிற்கு கல்வித்துறை சார்பில் மின்கட்டணம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகள் மின்சார இணைப்பை துண்டித்து சென்றதால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைத்துள்ளனர்.

Similar News

News November 25, 2025

ஓசூரில் மாபெறும் கல்வி கடன் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மற்றும் அனைத்து வங்கி நிர்வாகம் சார்பில் வருகின்ற நவ.26 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

கிருஷ்ணகிரி: தாய் சொன்ன வார்தையால் மனமுடைந்த சிறுமி தற்கொலை

image

காவேரிப்பட்டினம் அடுத்த ஜோதிபுரம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி திவ்யா. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திவ்யாவிடம் தாய் சுசிலா வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி திவ்யா வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நேற்று காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

News November 25, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!