News June 11, 2024
கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

ஓசூர் அலசநத்தம் சாலை பகுதியை சேர்ந்தவர் அருண் (30). இவர் டூவீலரில் ஒசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சம்பவம் அன்று மாலை சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் ஆப்ரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரியில் செப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 25லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளோமா முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் வாட்டி வதைக்கும் வெயில்

கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <