News August 25, 2024

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய 261 பேர் கைது

image

கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

கிருஷ்ணகிரி: IT வேலை கனவா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1800 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் திறமையை வளர்த்துக்கோங்க! (SHARE IT)

News December 13, 2025

ஓசூர்: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி!

image

தர்மபுரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகின்றது. அதற்காக இன்று(டிச.13) காலை 10 மணிக்கு குருப்பட்டி அருகே பயனில்லாத அரசு பள்ளி கட்டடம் ஒன்றை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தனர். அப்போது அப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பணியாளர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

News December 13, 2025

கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர், சூளகிரி அருகே உள்ள பொன்னால் நத்தம் என்று ஊரில் தனியார் கிரஷர் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். நேற்று (டிச.12 ) இரவு தனது ஊரிலிருந்து வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது, எரண்டபள்ளி கிராமம் அருகே சாலையில் அதிவேகமாக வந்ததால் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மதில் சுவரில் இடித்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

error: Content is protected !!