News August 25, 2024
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய 261 பேர் கைது

கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
ஓசூரின் ‘காதல் கோட்டை’ பற்றி தெரியுமா?

சேலம் கலெக்டராக இருந்த பிரெட், தன் மனைவிக்காக 1864ல் ஓசூரில் கோட்டை ஒன்றை கட்டினார். இந்த கோட்டையை கட்ட அரசு பணத்தை எடுத்ததற்காக பிரட் பதவி பறிக்கப்பட்டது. 1871ல் பிரட், மாளிகையை சென்னை மாகாண அரசுக்கு விற்று, லண்டனுக்கு திரும்பினார். 1937-ல் ஏலம் விடப்பட்ட இந்த கோட்டை சூறையாடப்பட்டு, தற்போது அகழி மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால், கடைசி வரை பிரட்டின் மனைவி இந்த கோட்டைக்கு வரவில்லை என்பது சோகமான ஒன்று.
News January 3, 2026
கிருஷ்ணகிரியில் மனநல கண்காணிப்பு குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவுபெற்ற மனநல மையங்கள் மற்றும் போதை மீட்பு மையங்கள் குறித்த கண்காணிப்பு கூட்டம் நேற்று (ஜன.2) மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் நேற்று(ஜன.2) நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், உள் நோயாளிகள் நிலை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
News January 3, 2026
கிருஷ்ணகிரி: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


