News August 25, 2024

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய 261 பேர் கைது

image

கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

கிருஷ்ணகிரி: போக்சோ குற்றவாளி தற்கொலை!

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் சதீஷ்(30) கடந்த மாதம் 24ஆம் தேதி போக்சோ வழக்கில் இருந்து ஜாமீனில் வந்தார். இந்நிலையில், மன வருத்தத்தில் இருந்து வந்த அவர், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் பின்புரம் உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஜன.1ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 10, 2026

கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

image

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அருகே உள்ள கூர்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி மண்ணம்மாள்(70). இவர், கூர்சம்பட்டியில் இருந்து பெருமாள்(55) என்பவரின் மொபட்டில் மத்தூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க சென்றார். பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய போது, மொபட்டில் இருந்து தவறி விழுந்த மண்ணம்மாள் படுகாயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி உயிரிழந்தார்.

News January 10, 2026

ஓசூரில் இன்று சிறப்பு மருத்துவ சேவை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” திட்டத்தின் கீழ், மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஓசூர் வட்டம் குமுதேபள்ளி மித்திராலயா பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண், பல், சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

error: Content is protected !!