News August 25, 2024
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய 261 பேர் கைது

கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
கிருஷ்ணகிரி: +2 போதும், ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <
News January 2, 2026
கிருஷ்ணகிரி: ரூ.50 ஆயிரம் கடனால் பறிபோன உயிர்!

கொட்டாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). கடந்த 25ம் தேதி மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் இருவரும் வேலுமணியிடம் கொடுத்த ரூ.50 ஆயிரம் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் வேலுமணியை தடியால் தாக்கி கழுத்தில் துண்டை போட்டு தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதனால் மனவேதனையடைந்து விஷம் குடித்த வேலுமணி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
News January 2, 2026
கிருஷ்ணகிரியில் கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


