News August 7, 2024
கிருஷ்ணகிரியில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி: டூவீலர் கம்பத்தில் மோதி 2 பேர் பலி!

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சரண் இவரும் சென்னையை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் இராயக்கோட்டையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் டூவீலரில் பணி முடிந்து ஓசூரை நோக்கி வந்தபோது, வரகானப்பள்ளி என்ற இடத்தில் இருந்த கம்பத்தின் மீது மோதி சரண் சம்பவ இடத்திலும், தினேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
News December 12, 2025
ராயக்கோட்டை கிளாமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் விபத்து

கெலமங்கலம் ராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் இன்று (டிச-11)காலை 7:00 மணி அளவில் வரகானபள்ளிஅருகே தினேஷ் மற்றும் சரண் என்ற இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று சாலை வலைவில் சாலையை கடக்கும் முயன்ற போது இருசக்கர வாகனம் அவர்களின் கண்ட்ரோல் இழந்து சென்டர் மீடியனில் இடித்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார் .
News December 12, 2025
கிருஷ்ணகிரி; இரவு ரோந்துப் பணி விவரம்

இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் அல்லது உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு உதவி எண் 100-ஐ டயல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


