News August 7, 2024
கிருஷ்ணகிரியில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.
Similar News
News December 23, 2025
ஓசூர்: மாநகரப் பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

பெங்களூர் டு ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே ஜூஜவாடி சோதனை சாவடியில் நேற்று (டிச-22) சிப்காட் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாநகர பேருந்தில் ஓடிசாவை சேர்ந்த வட மாநில இளைஞர் ஒருவர் சுமார் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
கிருஷ்ணகிரியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்: பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், டவுன் காவேரிப்பட்டினம், பன்னலோமங்கலம், தல்லிசுவரபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை. ஷேர் IT
News December 22, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கடன் செயலி (Loan App) மோசடிகளிடம் எச்சரிக்கையாக இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. RBI அங்கீகாரம் பெற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்துமாறும், புகைப்படங்களைச் சிதைத்து மிரட்டும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. நிதி சார்ந்த சைபர் குற்றங்களுக்கு உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து அல்லது இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க


